கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்ததில் விஏஓ, விவசாயி காயம்

திருவாடானை : திருவாடானை அருகே அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்து விஏஓ, விவசாயி காயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாகனூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விஏஓவாக ஆறுமுகம் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் அலுவலக கட்டிடத்தில் பணியில் இருந்தார். அப்போது மெக்கவயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (60), தனது இடம் தொடர்பான விபரம் தெரிந்து கொள்வதற்காக அலுவலகத்திற்கு வந்து விஏஓ உடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் மளமளவென பெயர்ந்து இருவர் மீதும் விழுந்தன. இதில் விஏஓ ஆறுமுகத்திற்கு லேசான காயமும், முதியவர் ஆறுமுகத்திற்கு பலத்த காயமும் ஏற்பட்டது. பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மங்களக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தேவகோட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: