பக்மத்: உக்ரைனுக்காக போரிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல், கெர்சன், உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மரியுபோலில் ஒவ்வொரு கட்டிட இடுபாடுகளில் இருந்தும் 100 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகளிடம் இங்கிலாந்தை சேர்ந்த து ஐடன் அஸ்லின், ஷான் பின்னெர், மொராக்கோவை சேர்ந்த சவுதின் பிராகிம் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.