ஆம்பூர்: ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு, வீடுகளுக்குள் புகுந்த சாரைபாம்பு, நல்ல பாம்பு ஆகியவற்றை தீயணைப்பு படையினர் நேற்று மீட்டனர். ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் சுமார் 7 அடி ஆழ தண்ணீர் தொட்டி ஒன்றில் பசுமாடு ஒன்று விழுந்தது. இதை மீட்க அப்பகுதியினர் முயற்சித்தனர். ஆனால், மாட்டை வெளியேற்ற முடியாத நிலையில் இதுபற்றி ஆம்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.