சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டை பேரூராட்சியிலிருந்து எல்லப்பட்டி பிரிவு, அம்மாபட்டி வழியாக உத்தமபாளையம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 50 ஆண்டுக்கு மேலான புளியமரங்கள் உள்ளது. அடர்ந்து வளர்ந்துள்ள புளியமரங்களால் எப்போதும் இந்த சாலை குளிர்ச்சியாக, நிழல் தந்து கொண்டே இருக்கும். இதனால் தேனி, உத்தமபாளையம், கம்பம் போன்ற ஊர்களுக்கு செல்பவர்களும் இந்த நிழல் சாலையில் வாகனங்களில் சென்று வருகின்றனர்.