சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்றும் ஆய்வுப் பணி தொடரும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து நேற்று தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.