தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.30 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பிரமாண்ட பூங்காவை எம்.பி. கனிமொழி திறந்து வைத்தார். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை, செல்பி ரசிகர்களுக்காக செல்பி பாய்ன்ட், சிறுவர்களை குதூகளிக்கும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படுயுள்ளது.