மும்பை: லுக்அவுட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தி, வெளிநாடு சென்று வர மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் திடீர் மரணத்தை தொடர்ந்து அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. முன்னதாக அவர் தேடப்படும் குற்றவாளியாக விசாரணை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. மும்பை போலீஸ், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பாட்னா போலீஸ் விசாரணை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு என்று பல்வேறு அமைப்புகளும் வழக்குகளை விசாரித்து வந்ததால், ரியா சக்ரபோர்த்தி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.