கேடிசி நகர் : திசையன்விளை தாலுகா திருமலாபுரம் அருகே வடக்கு இளங்குளம் ஆர்சி கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோனி பிரான்சிஸ் மனைவி சேவியர் மலர்விழி. இவர் தனது தாய் மேரிபாப்பு மற்றும் தங்கை ரோசாரி சாந்தி ஆகியோருடன் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் சேவியர் மலர்விழி கூறியிருப்பதாவது: எனது தந்தை இறந்து விட்டார். எனது கணவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதுபோல் தங்கையின் கணவரும் வெளியூரில் டிரைவராக வேலை பாாத்து வருகிறார் இதனால் நாங்கள்(தாய், 2 மகள்) 3பேரும் மேற்கண்ட முகவரியில் தனியாக வசித்து வருகிறோம். விதவையான எங்களது தாய்க்கு நாங்கள் 2 பெண்கள் மட்டும்தான்.