பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே கரிசலூரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். பாவூர்சத்திரம் அருகே உள்ளது கரிசலூர் கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில் குடியிருப்புகளின் அருகில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதனை அறிந்த கிராம பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு குடியிருப்புகளின் அருகே செல்போன் டவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.