கணவன் முருகனுக்கு 6 நாள் பரோல் கோரி நளினி மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: மருத்துவ காரணங்களுக்காக கணவன் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் கணவன் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை. 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

 மருத்துவ காரணங்களுக்காக கணவன் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ம் தேதி நானும், மே 21ம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம். அந்த மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, கணவன் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: