சண்டிகர்: கனடா தாதாவின் ஆட்கள் மிரட்டிய புகாரையடுத்து, பஞ்சாபி நடிகர் கர்தார் சீமாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பஞ்சாப் பிரிவு தலைவர் அக்ஷய் குமார், பஞ்சாபி சினிமா நடிகர் கர்தார் சீமா மீது அமிர்தசரஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘நடிகர் கர்தா சீமாவிடம் சில லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். பின்னர் கனடாவில் இருக்கும் தாதா கோல்டி பிரார் மூலம் என்னை மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.