பிரேசில்: பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் வடமேற்கு மாகாணமான பெர்னம்புகோவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக மாறிவிட்டன. மாகாண தலைநகர் ரெசிபிள் வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரெசிப் நகரத்தின் புறநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலையின் ஒரு பகுதியே சரிந்து விழுந்ததில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.