சென்னை: கடந்த வாரம் அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளதால், கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கடந்த 20ம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதற்கேற்ப கடந்த 26ம் தேதி தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டது. அதன் அறிகுறியாக தற்போது கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.