மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அக்னி வசந்த விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. மேலும் ஜலகிரீடை, வில் வளைப்பு, சுபத்திரை மாலையிடுதல், ராஜ சுப யாகம், துயில் உறிதல், அர்ஜுனன் தபசு, விராட பருவம், கிருஷ்ணன் தூது, கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட நாடகங்கள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று திரவுபதி அம்மன் ஆலய வளாகத்தில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது.