சேலம்: கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் சமீபகாலமாக கத்திரி வெயிலுக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. ஓரளவுக்கு மழை கை கொடுத்ததால் மார்ச் 15ம் தேதிக்கு மேல் தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது.