ஜகார்த்தா: கிழக்கு திமோர் கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கும், கிழக்கு திமோருக்கும் இடையே திமோர் தீவின் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக அளவிடப்பட்டுள்ளது. சேதம் குறித்த விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘கிழக்கு திமோர் தலைநகர் டிலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.