டோக்கியோ: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே டோக்யோவில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவு, கொரோனா பரவல் குறித்து பேசினர். இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது பேசிய அதிபர் ஜோ பைடன்; கொரோனா செயல்பாடுகளில் சீனா தடுமாறி வருவது ஆதாராப்பூர்வமாக தெரிகிறது. சீனா நமது மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் இந்தியா சிறப்பாக பணியாற்றியது. கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது.