கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். பாதுகாப்பு அளிக்க கோரி தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சதேஷ தீட்சிதர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், உள்துறை, தமிழக ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலாளருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.