திருச்சி:திருச்சி அடுத்த திருவெறும்பூர் நொச்சி வயல் புதூரை சேர்ந்த 19 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர், கடந்த 17ம் தேதி வயிற்றுவலி, உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவியின் வயிற்றில் விஷம் கலந்திருப்பது உறுதியானது. இதுதொடர்பாக போலீசாரிடம் அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில், என்னை காதலிப்பதாக கூறிய வாலிபரை செருப்பால் அடித்தேன். கடந்த 12ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, என்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அருகில் உள்ள ஒரு தெரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்தனர் என வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.