சீதாபூர்: சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சீதாபூர் சிறையில் இருந்து நேற்று வெளியில் வந்தார். அசம்கானுக்கு எதிராக கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது பல்வேறு ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அவர் பல வழக்குகளில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.