புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்று காணாமல் போன 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டு படகில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ், ராஜ் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நண்டு வலையை எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்து, கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து விசைப்படகில் சக மீனவர்கள் தேடித் சென்றனர்.