சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறனாளரும், தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையை கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி கனடா இலக்கிய தோட்டத்தின் ‘இயல்’ - வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்.