துறையூர்: திருச்சி அருகே 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரி மூர்த்தி, உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் சிக்கம் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள காந்தி ரோட்டில் சுரேஷ் என்பவரின் கடையில் ஆய்வு செய்தபோது குளிர்சாதன பெட்டியில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.