கொடைக்கானல்: கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த கோடை சீசன் காலத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன.இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பிரதான சாலையில் மச்சூர், பெருமாள் மலை, கரடி சோலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகள் மிக தாமதமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.