திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி மே 24ம் தேதி துவக்கப்படுகிறது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் கலெக்டர் விசாகன் கூறியுள்ளதாவது:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 59வது மலர் கண்காட்சி மே 24ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்தப்படுகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் மே 24ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி, சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா மே 24ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.