கரூர் : தமிழகத்தில் தற்போது ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது; 2 மணிநேரம் மட்டுமே காற்றாலை மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதை தடுத்து உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம். மின்வாரியத்தின் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் என்ற நிலையை அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.