திருவள்ளூர்: சென்னை எண்ணூரில் இருந்து திருவள்ளூர் அருகே மணவாளநகரில் உள்ள தனியார் செங்கல் சூளைக்கு லாரிகளில் சாம்பல் மண் ஏற்றி வரப்படுகிறது. இதையெட்டி நேற்று, 7 டன் எடை கொண்ட சாம்பல் மண் ஏற்றி கொண்டு லாரி புறப்பட்டது. டிரைவர் சங்கர், என்பவர் ஓட்டி சென்றார். திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே லாரி சென்றபோது, பின்புறம் உள்ள டயர்களுக்கு இடையே காற்று குறைவாக இருந்தது. இதனால் உரசல் ஏற்பட்டு, திடீரென டயர் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும், டிரைவர் லாரியை அங்கே நிறுத்தினார். தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பின்னர் டிரைவர், பழுதை சீரமைக்காமல், அப்படியே எடுத்து கொண்டு சென்றார். மாணவாளநகர் அடுத்த பட்டறை வழியாக சென்றபோது லாரியின் பின்பக்க டயர் கழன்று ஓடியது. அந்த நேரத்தில், திருவிழா நடந்து கொண்டிருந்தது. அந்தவேளையில், நிலையில் பொதுமக்கள் உள்ள பகுதியில் டயர் சிறிது தூரம் சென்று கீழே சாய்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.