வாலாஜாபாத் பேரூராட்சியில் முழு சுகாதார பணி துவக்கம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் சுழற்சி முறையில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ள, அதன் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் ஒருங்கிணைந்த தூய்மை பணி திட்டத்தின் கீழ் பள்ளி, ரயில் நிலையம், பஸ் நிலையம், கோயில்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் முட்புதர்கள், செடி, கொடிகள், குப்பை ஆகியவற்றை முழுமையாக அகற்றப்பட்டன. இப்பணிகளை பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, ஊராட்சி செயல் அலுவலர் பிரேமா ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருந்து முழு சுகாதாரத்தை பேணிகாப்பதை  வலியுறுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது‌. மேலும், 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் பேரூராட்சி வார்டுகளில் சுழற்சி முறையில் முழு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: