தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் சம்பா அறுவடை முடிந்த நிலையில் நவரை பட்டம் நெல் நடவு சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தா.பழூர் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, அருள்மொழி, இடங்கண்ணி, ஸ்ரீபுரந்தான், கோடாலிகருப்பூர், சோழன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் நவரை பட்டம் நெல் நடவு சாகுபடி செய்துள்ளனர்.