ராஜபாளையம் : ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வாறுகால் வசதி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது.