குன்னூர்: குன்னூர் அருகே வீட்டின் கதவை தட்டும் கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வீட்டின் கதவை தட்டும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் இரவு கரடி ஒன்று அங்கிருந்த வீட்டின் கதவை தட்டியது.