நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை தொடங்கி சூறைக்காற்றுடன் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதால் குமரி மாவட்டத்திலும் அவ்வப்போது சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது. அதிகபட்சமாக இன்று காலை வரை மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 19 மி.மீ மழை பெய்திருந்தது. நாகர்கோவில் 10, முள்ளங்கினாவிளை 18.2, ஆனைக்கிடங்கு 17, பெருஞ்சாணி 8.2, திற்பரப்பு 7.4, பாலமோர் 7.4, புத்தன் அணை 7.4, இரணியல் 4, குருந்தன்கோடு 4, பூதப்பாண்டி 3.4, குளச்சல் 3.4, மயிலாடி 3.2, பேச்சிப்பாறை 3 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. ஆரல்வாய்மொழி உள்ளிட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்சார ஒயர்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.