தஞ்சை: தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (55). ஆடிட்டர். மேலும் வீட்டருகே கோழி, மீன் பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணைக்கு எதிரே உள்ள மாநகராட்சியின் குளியலறை, கழிவறை கட்டிடத்தை அதே பகுதியை சேர்ந்த அதிமுக 5வது வார்டு பிரதிநிதி ருக்மணி என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காண்ட்ராக்ட் எடுத்து பராமரித்து வந்தார். இதற்கிடையே குளியலறை, கழிவறை கட்டிடத்தை கடந்த 2 மாதத்திற்கு முன்பு மகேஸ்வரன் காண்ட்ராக்ட் எடுத்தார். இதனால் மகேஸ்வரனுக்கும், ருக்மணி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் பண்ணையில் மகேஸ்வரன் சாப்பிட்டு கொண்டிருந்தார்.