திருவாரூர்: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (39). இவர், ஒன்றிய அரசின் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனது மனைவி ஜோஸ்பின் மேரியின் பெயரில் வீடு கட்டுவதற்காக ஊராட்சி மன்ற மூலம் அனுமதி பெற்றுள்ளார். இதில் முதல் தவணை தொகையை தனக்கு ஒதுக்கும்படி ஊராட்சி செயலர் குமாரிடம் (42) கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.