ஜிப்மரில் இந்தி திணிப்பு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (ஜிப்மர்) இயக்குநர் அலுவலக கோப்புகள் அனைத்தும் இனி இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதுநாள் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கோப்புகள் எழுதப்படும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது இயக்குநரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. உடனடியாக அந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: