ஜிப்மரில் இந்தி திணிப்பு: 10-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பைக் கண்டித்து மே 10-ம் தேதி மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெரும் என வைகோ தெரிவித்துள்ளார், மருத்துவம் கற்பிப்பதற்கு பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளி ஆக்க முயற்சிப்பதாக வைகோ கூறியுள்ளார். எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழை காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும் என வைகோ தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு சுற்றறிக்கையை ஜிப்மர் இயக்குனர் உடனே திரும்ப பெற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

Related Stories: