பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமக்காபட்டி, அம்சாபுரம் மற்றும் மஞ்சளாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த சூறாவளிக் காற்றால் அந்த பகுதியில் வாழைமரங்கள், தென்னைமரங்கள் முறிந்து சேதமடைந்தன. மேலும் விளை நிலங்களுக்கு செல்லும் மின்கம்பிகளில் தென்னை மரங்கள் விழுந்ததால் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.