ஒரத்தநாடு: தஞ்சாவூர் அருகே கெட்டுப்போன சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டாமாண்டு படித்து வரும் பிரவீன் (22), பரிமளேஸ்வரன்(21), மணிகண்டன் (21) ஆகிய 3 பேரும் ஒரத்தநாடு தென்னமநாடு பைபாஸ் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்றுமுன்தினம் மாலை சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து 3 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.