உலகம் இயக்குநர் ஆயிஷா மீது தேச துரோக வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு!: லட்சத்தீவு பா.ஜ.க-வில் இருந்து 15 நிர்வாகிகள் விலகல்..!! Jun 12, 2021 ஆயேஷா இலட்சத்தீவுகள் பாஜக கவரட்டி பாரதிய ஜனதா கட்சி ஆயிஷா சுல்தானா தின மலர் கவரத்தி: திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு போடப்பட்டதை கண்டித்து லட்சத்தீவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் லட்சத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகளுக்கு எதிராக திரைப்பட இயக்குனரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா தெரிவித்த கருத்து விவாதத்திற்கு உள்ளானது. இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், இதை கண்டித்து லட்சத்தீவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆயிஷா சுல்தானா மீது தவறான மற்றும் அநீதியான முறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே லட்சத்தீவில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர், பாஜகவினர் மற்றும் அக்கட்சியோடு தொடர்புடையவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. … The post இயக்குநர் ஆயிஷா மீது தேச துரோக வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு!: லட்சத்தீவு பா.ஜ.க-வில் இருந்து 15 நிர்வாகிகள் விலகல்..!! appeared first on Dinakaran.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்; 15ம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரித்த இலங்கை தமிழர்கள்: பெண்கள் உட்பட பலர் கைது
போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்.. அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்; சட்ட மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு!!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலை திட்டம் : அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
காசாவில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்ட ஐநா: இந்திய தூதரக, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி
சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு
ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு
ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்