ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நார் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விளக்கேத்தி பகுதியில் கீழ் பவானி பிரதான கால்வாய் அருகே தென்னை நார் கழிவுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கயிறு உற்பத்திக்கான நார் பிரித்தெடுக்கப்பட்ட பின் திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளை பதப்படுத்தி பேக்கிங் செய்து கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு பதப்படுத்தும் போது, அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் செந்நிறத்திற்கு மாறி காட்சியளிக்கின்றன.