புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை காவல்நிலையத்தை சிவனடியார்கள் நேற்று மாலை திடீரென முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன் யூ டியூப் சேனல் ஒன்றில் ஒரு தனிநபர், சிதம்பரம் நடராஜரை பற்றி அவதூறாக பேசியதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப்போராட்டம் நடந்தது.