ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திருவள்ளூர்: திருவள்ளூர் டோல்கேட் அருகில் ரமலான் பண்கையையொட்டி நேற்று இஸ்லாமியர்கள் ஈத்கா மைதானத்தில்  சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் இந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளில் இஸ்லாமியர்கள் திரளாக வந்திருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

Related Stories: