பெரம்பலூர்:ஆண்டு க்கு ஒரு முறை மட்டுமே தொழுகை நடத்தப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை, வாலி கண்டபுரம் சமஸ்கான் பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகைகளுக்கு ஏற்பாடு. தூய்மைப் படு த்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பள் ளி வாசல்களிலும் நாளை (3ம்தேதி)காலை 8மணிக்கு சிறப்புதொழுகை நடத்தப் பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்த லங்களில் ஒன்றான, கிபி 16ம் நூற்றாண்டின் இறுதி யில் கட்டப்பட்டு இந்தியத் தொல்லியல்துறை கட்டுப் பாட்டிலுள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை வளாகத்திலுள்ள கீழ்க்கோட்டை பள்ளிவாச லிலும், 1723ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான,இந்தியத் தொல்லியல்து றை கட்டுப்பாட்டிலுள்ள, வா லி கண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசலிலும் ஆண்டுக் கு ஒருமுறை மட்டுமே நடத் தப்படும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நாளைக் காலை யில் நடைபெறவுள்ளது.