கரூர் : கரூரில் விபத்துக்களை தடுக்கும் வகையில் கலெக்டர் உத்தரவின்பேரில் 2 ரவுண்டானா அளவை குறைப்பதற்கு அதிகாரிகள் நேற்று ரவுண்டானாவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் கீழ் பல்வேறு சீர்திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் கடந்த சாலை பாதுகாப்பு வாரம் விழாவின்போது பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கையில் கலெக்டர் பிரபுசங்கர், கரூர் அருகிலுள்ள மனோகரா கார்னர் மற்றும் அமராவதி பாலம் அருகில் உள்ள லைட் ஹவுஸ் கார்னர் ஆகிய இரண்டு ரவுண்டானாவில் அளவையும் குறைத்தால் பொதுமக்கள் பயணத்திற்கு வசதியாக இருப்பதுடன் பயணிகளின் வாகனங்கள் திருப்பி செல்வதற்கு வசதியாக இருக்கும்.