ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படம் நேற்று திரைக்கு வந்தது. இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சியில் தனது பழைய நினைவுகளை சிரஞ்சீவி பகிர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:டெல்லி அரசு 1989ல் எனக்கு நர்கீஸ் தத் விருது கொடுத்தது. இந்த விருது பெற நான் டெல்லி சென்றிருந்தேன். அந்த விழா நடைபெறும் இடத்தில் இருந்த சுவரில் இந்தி சினிமாவின் பிரபலமானவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதில் தென்னிந்திய கலைஞர்களின் படங்களையும் நான் எதிர்பார்த்தேன். ஒரு மூலையில் எம்ஜிஆர், பிரேம் நசீர் ஆகியோரின் புகைப்படம் மட்டுமே இருந்தது. என்.டி.ராமராவ், சிவாஜி, நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் உள்பட தென்னிந்திய ஜாம்பவான்களின் புகைப்படங்களே அங்கு இல்லை.