தஞ்சை அருகே 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 4 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே தோழகிரிபட்டியில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலைமுடிந்து சென்ற பெண்ணை வீட்டில் விட்டு விடுவதாக கூறி காட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கூட்டு பாலியல் தொடர்பாக கொடிஅரசன், சுகுமாறன், கண்ணன், தமிழரசன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: