கணவரின் இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையை சேர்ந்தவர் ராமர் கடந்த 8ம்தேதி இறந்தார். கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு மனைவி அமிர்தம் (62) விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தபோது  விஏஓ சுரேஷ் சான்று வழங்க, ரூ.1000 லஞ்சம் கேட்டார். இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ஆலோசனைபடி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற விஏஓ சுரேஷை அங்கு மறைந்திருந்த போலீசார், கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: