இந்தி தான் நமது நாட்டின் தாய் மொழி மற்றும் தேசிய மொழி என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டுவீட்

மும்பை: இந்தி தான் நமது நாட்டின் தாய் மொழி மற்றும் தேசிய மொழி என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டுவீட் செய்துள்ளார். இந்தி தேசிய மொழி இல்லை என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் கருத்துக்கு அவர் பதில் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தி தேசிய மொழி இல்லையெனில் ஏன் உங்கள் மொழி படங்களை இந்தியில் வெளியிடுகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த சில மாதங்களாக தென்னிந்திய மொழிகளில் தயாரான திரைப்படங்கள், இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன.

குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எ.ஃப்.-2 உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இந்தி என்பது தேசிய மொழி அல்ல. பாலிவுட் திரைப்படங்களை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டாலும், சமீப காலமாக அவை வெற்றி பெறுவதில்லை என கன்னட நடிகர் கிச்சா சுதீப், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகின்றன எனவும் கூறியிருந்தார்.

Related Stories: