மேலக்கோட்டையூரில் திருமணமான 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: கணவருக்கு வலை
திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் திருமணமான 6 மாதத்தில் ஒரு பெண் மர்மமான நிலையில் மரணமடைந்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணவரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் கிராமம், பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவர் கணேசன் (42). நாமக்கல்லில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணமாகி, மேலக்கோட்டையூரில் தனது மனைவி ராஜேஸ்வரி (37) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.