மாவட்ட வளைகோல்பந்து லீக் போட்டி ஹாக்கி வீரர்களுக்கு காஞ்சி கலெக்டர் அழைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், ஆண்களுக்கான மாவட்ட அளவிலான வளைகோல் பந்து லீக் போட்டி வரும் 30ம்தேதி காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட  விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும்  லீக்  முறையில் நடத்தப்படும்.

போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் வரும் 29ம்தேதி மாலை 5 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மாவட்ட அளவில் வெற்றிபெறும் அணிகள் மண்டல போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வீரர்கள் கலந்துகொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: